உபி : வேலையில் சேர்ந்த முதல் நாளில் மருத்துவமனை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நர்ஸ் பிணம் மீட்பு.! -கற்பழித்து கொலை என உறவினர்கள் குற்றசாட்டு.!

உத்தரபிரதேசம் உன்னாவ்வில் உள்ள நியூ ஜீவன் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை வேலையில் (ஏப்ரல் 29) சேர்ந்த நர்ஸ் ஒருவரின் உடல் மருத்துவமனை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.  

இது குறித்து அவரது குடும்பத்தினர் இது கற்பழிப்பு மற்றும் கொலை என் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக போலீசார் 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து உன்னாவ் கூடுதல் எஸ்பி சஷி சேகர் சிங் கூறுகையில் "நியூ ஜீவன் மருத்துவமனையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மரணத்தின் சூழ்நிலையை அறிய, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றசாட்டு உண்மையாக இருககும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உன்னாவ் கூடுதல் எஸ்பி சஷி சேகர் சிங் கூறினார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post