குழந்தைகள் திட்ட அலுவலரை அரிவாளால் வெட்டிய உதவியாளர் கைது!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை இளநிலை உதவியாளராக இருந்த உமா சங்கர் அரிவாளால் வெட்டியதில்  ராஜேஸ்வரி படுகாயம் அடைந்தார்.

படுகாயமடைந்த ராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அரிவாளால் வெட்டிய உமாசங்கரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால்  அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

உமாசங்கருக்கு திட்ட அலுவலர் ராஜேஸ்வரி 17 பி- யில் தண்டனை கொடுத்ததால் அரிவாளால் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.


-தேனி செய்தியாளர்

ரா.சிவபாலன்

Previous Post Next Post