ஓட்டப்பிடாரத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் வேண்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் ஆதனூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மிளகு நத்தம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள்  அளித்துள்ள மனுவில் 

"எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் 20.03.2022 அன்று இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டது தற்போது பள்ளி இரண்டு வாடகை வீட்டில் ரூபாய் 2000 கட்டணத்துடன் இயங்கி வருகிறது 

இங்கு 40 மாணவர்கள் 2 ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் இக்கட்டிடத்தில் போதிய அடிப்படை வசதி இல்லை சிரமத்துடன் நாட்களை கழித்து வருவதாகவும்எனவே உடனடியாக ஆய்வு செய்து புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி தரவேண்டும்" என மனு அளித்துள்ளனர்.

Previous Post Next Post