ஏபிஜே அப்துல் கலாமின் 7ம் ஆண்டு நினைவு நாள் 90 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று அஞ்சல் செலுத்திய பக்தர்.!


முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 7வது நினைவு நாளை முன்னிட்டு 90 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடந்து வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

ராமேஸ்வரம்: ஜூலை29

ஆன்மீக கடவுளுக்கும் நம்முடன் வாழ்ந்து மறைந்த சித்தர்களுக்கும் விரதம் இருந்து பாதையாத்திரையாக செல்லும் பழக்கம் நம்மிடைய உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அப்துல் கலாம் தீவிர பக்தனான தேவகோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கலாம் நினைவு நாளன்று கடந்த 7 ஆண்டுகளாக தேவகோட்டையில் இருந்து நடைபயணமாக வந்து ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவருகிறார்

 இவருடன்  சீனி இவரது ஐந்து வயது மகன் முகம்மது சமீர் இருவரும் சைக்கிளில் காரைக்குடியில் இருந்து சைக்கிள்பயணமாக வந்தனர் மேலும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் பேரவை சேர்ந்த ஏகே அர்ஜுனன் துறை மற்றும் வினோத் குமார் சிவா அனு ராஜா என் வெங்கடேஷ் உடனிருந்தனர்.

Previous Post Next Post