சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்


குலசேகரபட்டினம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும்

தனிப்படை போலீசார் நேற்று (30.06.2022) உடன்குடி கிறிஸ்டியாநகரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சித்திரைசெல்வன் (48) என்பதும் அவர் அங்குள்ள பள்ளி அருகே 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சரக்கு வாகனத்தில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.40ஆயிரம் மதிப்புள்ள 53 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post