தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது


நாடு முழுவதும் காவல் துறையில் சிறப்பாக புலனாய்வு செய்பவர்களை தேர்வு செய்து மத்திய அரசு ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதான இந்த விருதுக்கு தமிழக காவல் துறையில் இருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கூடுதல் பெண் சூப்பிரண்டு கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்து லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகிய 5 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதே போன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேறு ஒருநாளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

புலனாய்வு துறையில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி உள்பட 5 பேருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post