ஆணைய அறிக்கையை ஏற்றுள்ள அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- சப்ளையர் அசோசியேசன் & ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்


தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் காரணமில்லை என ஒரு நபர் ஆணையம் கூறியுள்ளதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதை சார்ந்து தொழில் செய்த வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் இன்று சப்ளையர் அசோசியேசன் சார்ந்த ஜவகர், ரமேஷ்,ஒப்பந்ததாரர்கள் சங்க துணை தலைவர் பரமசிவன், துணைச் செயலாளர் சோமசுந்தரம்,ஒப்பந்ததாரர்கள் சங்க பாலசுப்பிரமணியன்,சுரேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

சப்ளையர் அசோசியேசன் சார்ந்த ஜவகர் பேசுகையில்... நீதிபதி அருணா ஜெகதீசன் -அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் போது வாழ்வாதாரத்தை நல்லபடியாக உயர்த்தியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் எங்களை போன்றவர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  உள்ளோம். தொழில்முறை மிக மோசமான வாழ்வாதாரமாக இருந்து கொண்டிருக்கிறது

நமது தமிழக அரசும் தமிழக முதல்வர் இப்போது தமிழ் நாட்டை தொழில் வளம் மிக்க மாநிலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். 

தென்மாவட்டத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை வந்தால் தான் தொழில் சிறக்கும். அனைவருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  கேட்டுக்கொள்கிறோம் என்றார். 

ஸ்டெர்லைட் ஆலை கொடுத்த ஆதரவினால் எங்களை  போன்ற சிறுதொழில்கள் நன்றாக தொழில் செய்தார்கள்,  இப்பொழுது அனைவருடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  நாங்கள் அரசுக்கு கணிசமான ஒரு தொகை வரியாக கொடுத்துக் கொண்டிருந்தோம்.  இப்பொழுது  அது பாதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு நமது இந்திய தாமிர அதிகமாகி இறக்குமதி செய்து வருகிறது.  நமது இந்திய திருநாடு மேன்மேலும் வளர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒப்பந்ததாரர்கள் சங்க துணை தலைவர் பரமசிவன் கூறுகையில்....

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் -அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளதால் இதன்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

நாட்டின் ஏற்றுமதி செய்யுமளவுக்கு காப்பர் உற்பத்தி இருந்தது. தற்போது 35 சதவீதம் காப்பர் இறக்குமதி செய்யபடுகிறது.தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருந்த ஆலையில் எந்தவித பிரச்சனையும் இல்லை. எனவே இயங்கி கொண்டிருந்த ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஒரு டிரிலிய்யன் உற்பத்தி மேற்கொள்ள தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.தென் மாவட்ட வேறு எந்த தொழில்களும் வராத சூழ்நிலையில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட்  ஆலை உடனடியாக திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Previous Post Next Post