காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு

 உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். சென்னையிலிருந்து தடையவியல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என கூறினார். 

கோவை மற்றும் மாநில கமாண்டோ குழுவைச் சேர்ந்த பாம்ப் ஸ்குவாட் குழுக்களும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் மோப்ப நாய் மூலமும் ஆய்வு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

காரில் 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளதாக தெரிவித்த அவர் அதில் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவித்தார். எங்கிருந்து இவை வாங்கப்பட்டன என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

விபத்துக்குள்ளான வாகனம் மாருதி கார் என தெரிய வந்துள்ளது. அதன் பழைய உரிமையாளர்கள் மற்றும் புதிய உரிமையாளர் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 


உயிரிழந்தவரின் அடையாளங்களை சேகரித்து அவர் யார் என புலன் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார். காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Previous Post Next Post