மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு.!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி,  தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் சாருஶ்ரீ முன்னிலையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர்,  மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post