பால் பாக்கெட்டுகளில் பொங்கல் வாழ்த்து.!! - அசத்திய ஆவின் பால் நிறுவனம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

 


ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டுகளில் பொங்கல் வாழ்த்து அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது  பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காலை  நேரத்தில் பால் வாங்கிய மக்கள் பொங்கல் வாழ்த்துடன் பால் பாக்கெட்டுகளை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தனர். மதுரையில் விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில், மாட்டுப் பொங்கல் வாழ்த்து என, அச்சடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பால் வளத்துறை அமைச்சராக நாசர் பதவியேற்றதிலிருந்து ஆவின் பால் விற்பனை கிடு கிடு ஏற்றம் கண்டு வருகிறது. பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவையும் சக்கை போடு போட்டு வருகின்றன. வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஆவினில் கேக் அறிமுகம் செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று பொங்கல் வாழ்த்துடன் வெளியான ஆவின் பால் பாக்கெட்டுகள் மக்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பயைும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post