தேசிய வாக்காளர் தின பேரணி: ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்!

 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி இராஜாஜி பூங்கவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பேரணியில் பங்கேற்றவர்கள் ''வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என வாக்காளர் உறுதி மொழி ஏற்றனர்.

விழாவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு(தேர்தல்) உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி காய்கனி மார்க்கெட் பழைய பேருந்து நிலையம் வழியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் கல்லூரி, மாணவ மாணவிகள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post