ஸ்ரீபெரும்புதுார் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - தொழிற்சாலையின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்திட முதல்வருக்கு செல்வப் பெருந்தகை MLA கோரிக்கை.!

 

சென்னை புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட சோமங்கலம் அருகே காட்ரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன பெயின்டிங் ஆலையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 5 தொழிலாளர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவருமான செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"திருப்பெரும்புதுார் தொகுதிக்குட்பட்ட காட்ரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ORBIT COATINGS PRIVATE LIMITED நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து 5க்கும் மேற்ப்பட்டடோருக்கு தீக்காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிசிச்சை பெற்று வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும். வேதனையும் அளிக்கிறது.

ஒரு சில தொழிற்சாலைகளில் அரசின் விதிகளை கடைப்பிடிக்காமல் இருப்பதாலும். முக்கியமான விதி முறைகளை மீறுவதாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த தொழிற்சாலையின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்திடவும். மேலும் இது குறித்து விசாரித்து இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுமாறும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post