தேன்கனிக்கோட்டை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாப பலி

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். 45 வயதான இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவருடைய மகள்கள் தமிழரசி (வயது 19), தமிழ் பிரியா (வயது 17). 

இதில் தமிழரசி தருமபுரியில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாடிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  இரண்டாவது மகள் தமிழ்பிரியா  சேலம் தனியார் கல்லூரியில் பிசியோதரபி படித்து வந்திருக்கிறார். 

இந்தநிலையில்  தமிழ்அரசியும், தமிழ்பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் 10 வயது மகன் அம்பேத்வளவன்  என்ற சிறுவன் உடன்  இருசக்கர வாகனத்தில் தேன்கனிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.

 அப்போது சாப்பராணப்பள்ளி அருகே உள்ள வளைவில்,  இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது  கோழி தீவனம் ஏற்றி சென்ற டெம்போ லாரி மோதியுள்ளது.  லாரி சக்கரம் ஏறியதில் 3 பேரும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 

தேன்கனிகனிக்கோட்டை போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது. டிஎஸ்பி முரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Previous Post Next Post