கார் குண்டு வெடிப்பு பின்னனியில் யார்.. யார்?...சென்னை, கோவை, நெல்லையில் இன்று என்.ஐ.ஏ., சோதனை!

 கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட பயங்கர வெடி குண்டு மூலப் பொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. பலரும் கார் சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வந்த நிலையில், அது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 


 இந்த குண்டு வெடிப்பில் ஜமீசா முபின் என்ற வாலிபர் பலியானார். ஜமேசா முபீன் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் முகமது தல்கா , முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 

 இந்த வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே கோவை வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் ஜமீஷா முபீனின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருந்தனர். 

அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர். கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம், குனியமுத்தூர் ஆத்துப்பாலம், கரும்புக்கடை, வசந்தம் நகர் உள்பட பல இடங்களில் பல நபர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post