தூத்துக்குடி பேருந்து நிலைய பகுதியில் புதிய கழிப்பறை கட்டும் பணி - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு .

 

தூத்துக்குடி மாநகராட்சியில் பிரையன்ட் நகர், மாசிலா மணிபுரம், செல்சினி காலனி, ஸ்டேட் பேங்க் காலனியில் நடை பெற்று வரும் புதிய சாலைப் பணிகளையும், புதுபிக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் பழைய பஸ் நிலையத்தையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்று வரும் புதிய கழிப்பறை மற்றும் அதன் அருகே உள்ள கலைஞர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் நடைபெற்று வரும் சுத்தப்படுத்தும் பணிகளையும் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது மேயருடன் துறை சார்ந்த அதி காரிகள் அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post