திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் பலி:பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்

 பள்ளி வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில்  பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரப்பாளைளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் இன்று காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார். 


அப்போது திருப்பூர் கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி அருகே அந்த பள்ளியின் வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் பலியான ராதாவின் உறவினர்கள் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் உரிய நியாயம் வேண்டும் என்றும் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது


Previous Post Next Post