நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி மோசடி வழக்கு - தனியார் நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

 

நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத் தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர்.புகாரி ஆகியோர் மீது கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி சட்டவிரோதமாக தனது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ததாக கடந்த 2022 மார்ச் மாதம் சட்ட விரோத பண பரிமாற்றச்ட் டத்தின் கீழ் அகமது புகாரியை அமலாக்கத்துறை

அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் அவர், ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அகமது புகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய் யப்பட்டுள்ளார். ஓராண்டு ஆகியும் விசாரணை முடி யாததால் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, அகமது புகாரி மீதான விசாரணை முடிந்துவிட்டாலும், அவருடன் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் குறித்தும், அயல்நாடு முதலீடுகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்க அவசி யம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அகமது புகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post