2026ல் அதிமுக தலைமையிலான ஆட்சி... முன்னாள் அமைச்சர்செங்கோட்டையன் பேச்சு-

சத்தியமங்கலத்தில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  சத்தியமங்கலம் தெற்கு, வடக்கு ஒன்றியம், சத்தியமங்கலம் நகர அதிமுக  பூத் கமிட்டி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  


அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டை யன் எம்.எல்.ஏ.,  தலைமை தாங்கினார். பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, ஒன்றியச் செய லாளர். என்.என்.சிவராஜ், சி.என். மாரப்பன், சத்திநகர அதிமுக செயலாளர் ஓ.எம். சும்பிரமணியம் , அரியப்பம்பாளையம் பேரூர் கழகச் செய லாளர் தேவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:

 திமுக தற்போது கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல் வேறுபிரச்சனைகளில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. அதிமுக கட்சியினர் ஒற்றுமை யுடன் செயல்பட்டு கொண்டி ருக்கிறோம். அதிமுக எஃகு கோட்டை,இதை  யாராலும் அசைக்க முடியாது. அனைவரும் இணைந்து 2 கோடி கட்சி உறுப்பினர்களை இணைத்து, வரலாறு படைத்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும் என்றார். 


மேலும் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 39 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றும், 2026ல் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றார். கூட்டத்தில் அதிமுக மாவட்ட, ஒன்றிய,பேரூர். வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், கட்சியினர், பூத் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post