ராகுல் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் சீசன் 5 கிரிக்கெட் போட்டி


ராகுல் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் சீசன் 5 கிரிக்கெட் போட்டி அகில இந்திய ராகுல் இளைஞர் நல விளையாட்டு கூட்டமைப்பு தேசிய தலைவர் மு.விஜயலட்சுமனன் தலைமையில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றது.


ஆண்கள் அணி, பெண்கள் அணி இரு அணிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றது.இதில் ஆண்கள் பிரிவில் மும்பை அணி முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு ராகுல் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தை பெற்றது. இதேபோல் பெண்கள் பங்கேற்ற ராகுல் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு அணி முதல் இடத்தை பெற்றனர். மகாராஷ்டிரா பெண்கள் அணி இரண்டாவது இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் வழங்கப்பட்டது.இதில் அகில இந்திய ராகுல் இளைஞர் நல விளையாட்டு அமைப்பு தேசிய செயலாளர் சேலம் ஆர். சண்முகசுந்தரம்,டென்னிஸ் பால் கிரிக்கெட் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், செந்தில், கண்ணன், ராம், ஆல் மார்சியல் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 


Previous Post Next Post