சத்தியமங்கலம் கெம்பநாய்க்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் சாலை பாதுகாப்பு பிரதிபலிப்பு கண்ணாடி அமைப்பு -


ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன் பாளையம் (இரண்டாம் நிலை) பேரூராட்சி பகுதியில், வாகன ஓட்டிகளுக்கு, சாலை வளைவில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்து நிகழ்வதை தவிர்க்கும் பொருட்டு, எதிர்வரும் வாகனம் வருவது தெரியாமல் உள்ள இரண்டு இடங்களில், வாகன ஓட்டிகளுக்கு எளிதில் வழி அறியும் வகையில் பிரதிபலிப்பு கண்ணாடி கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங் கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப் பட்டு, சாலை போக்குவரத்திற்கு உதவும் வகையில், விழிப்புணர்வு பாதுகாப்பு சாலை வழிகாட்டி கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கெம்பநாயக்கன்பாளையம் பேரூ ராட்சி மன்ற தலைவர், K. ரவிச்சந்தி ரன் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். பேரூராட்சி தலைவரின் துரித மற்றும் விழிப்புணர்வு பாது காப்பு நடவடிக்கையை, வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டியும். பேரூராட்சி தலைவருக்கும், பேரூராட்சி நிர்வாக த்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Previous Post Next Post