போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா காலனி செல்லும் சாலை அரிசி குடோன் முதல் மின்சாரம் அலுவலகம் வரை வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இச்சாலை ஆனது மிகவும் முக்கியமான பிரதான சாலை ஆகும். சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன இப்பகுதியில் தாலுக்கா அலுவலகம் அமைந்துள்ளதால் பெரும்பாலானோர் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர் இந்நிலையில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுகளுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது ஆகவே காவல்துறை வாகனங்களை ஒழுங்குபடுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறு பந்தலூர் வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Previous Post Next Post