சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் Dr. A. P. J. அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஐயா ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஐயா அவர்களின் திருஉருவ சிலைக்கு கல்லூரியின் சேர்மேன் டாக்டர் மக்கள் ஜி ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 




இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஐயா அவர்களின் புகழை போற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 



தொடர்ந்து கல்லூரியில் ஐயா அவர்களை பற்றி கட்டுரை போட்டியும் பேச்சுப் போட்டி நடைபெற்று மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



 இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சதீஷ்குமார் துறை தலைவர்கள் ரவி மோகன் சிஜூ மோகன்ராஜ் சதீஷ்குமார் மற்றும் சென்னிமலை சார்ந்த தன்னார்வ அமைப்புகள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்


தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Previous Post Next Post