நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அவர்களின் சேவையை பாராட்டி அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா மிக சிறப்பாக மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறார் அவர் பேரன்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு அரசு பணிகளை மிகவும் செம்மையாக செய்து வருகிறார் சாலை பணிகள் தடுப்பு சுவர்கள் குடிநீர் பணிகள் என மக்களுக்கு தேவையான அத்தியாயத்தை அனைத்து தேவைகளை அறிந்து செய்து வருகிறார் இதனால் இவரின் மக்கள் நல பணியினை பாராட்டி கடநாடு ஊராட்சி சொக்கநல்லி பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனர் நலத்திட்ட வழங்கும் விழாவில் அறக்கட்டளை நிறுவனர் தமிழ் வெங்கடேசன் தலைமையில் ஜே.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி துணை முதல்வரும் முனைவர் கே.பி அருண் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இதனை அடுத்து அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் அமைப்பினர் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Previous Post Next Post