மயிலாடுதுறையில் மாநில பள்ளி கிரிக்கெட் போட்டியில் வென்ற சென்னை அணிக்கு கலைஞர் சுழற் கோப்பையை எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கினார்!

*மயிலாடுதுறையில் மாநில  பள்ளி கிரிக்கெட்  போட்டியில் வென்ற சென்னை அணிக்கு கலைஞர் சுழற் கோப்பையை எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கினார்!   தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 14வது மாநில  அளவில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைஞர் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. மாநில அளவில் சென்னை, திருவள்ளூர், சேலம், மயிலாடுதுறை உள்பட 8 மண்டல மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மயிலாடுதுறை  அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று  கலைஞர் சுழற் கோப்பையை வென்றது. இதற்கான பரிசளிப்பு விழா தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க மாநிலத் தலைவர் காவல்துறை முன்னாள் ஐஜி சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.  அகில இந்திய பொதுச் செயலாளர் சுனில் கலந்துகொண்டு வரவேற்றார்.   மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் கழகத்தினுடைய நிர்வாகிமான ஜெகவீரபாண்டியன்,  மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், மாவட்ட செயலாளர் மூவை. பாரதிதாசன், மாநில பொறுப்பாளர் விஜயன் ஆகியோர் பேசினார்கள். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற  சென்னை அணிக்கு கலைஞர் சுழற் கோப்பை பரிசளித்தார். இந்நிகழ்ச்சியில் சாய் விளையாட்டு மைய இயக்குநர் மணிவாசகம், தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க பொறுப்பாளர்கள்  கலைச்செழியன், சேலம் சண்முகராஜ், திருவள்ளூர் வீரராகவன், சென்னை வீரரெட்டி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மூவை. பாரதிதாசன், மற்றும்  உடற்கல்வி இயக்குனர்கள் மூவலூர் அருண் பாபு, சுந்தர், நடுவர்கள் சர்வீஸ் அனீஸ் உள்பட பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
Previous Post Next Post