கேரளா: கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.!


 கேரளா:  கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.!


கேரளா களமசேரியில் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஒருவர் பலி, 36 பேர் காயம். ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் காலை 9:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.



கொச்சியில் உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 2,200 பேர் கூடியிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்து அடுத்தடுத்து மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் ஒருவர் இறந்தார், மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Previous Post Next Post