மகிழ்ச்சியோடு வந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்த பரிதாபம்... புதிய காரில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது லாரி மோதி படுகாயம்... அப்பளமாக நொறுங்கிய கார்...

 மகிழ்ச்சியோடு வந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்த பரிதாபம்... புதிய காரில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது லாரி மோதி படுகாயம்... அப்பளமாக நொறுங்கிய கார்...

திருப்பூர் பெரியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் புதிய கார் வாங்கியதை அடுத்து, தனது குடும்பத்துடன் இன்று காலை சென்னிமலை கோவிலுக்கு சென்றார். கோவிலில் மகிழ்ச்சியாக சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் தனது புதிய காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை பிரகாஷ் ஓட்டி வந்த நிலையில், இன்று காலை அந்த கார் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூளிக்குளம், குளத்துப்பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. 


அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த தண்ணீர் லாரி பிரகாஷ் வந்த கார் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இதில் பிரகாஷ் வந்த புதிய கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்த பிரகாசும், அவரது மாமியார் பானுமதியும் பலத்த காயமடைந்தனர். இருவரும் முதலுதவிக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கிய காரை பிரகாஷ்  வாங்கி  4 நாள் தான் ஆகிறது. புதிய காரில் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கோவிலுக்கு  சென்று வந்த போது, இந்த விபத்து நிகழ்ந்திருப்பது  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post