அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

 

அத்தாணியில் உள்ள சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் திருப்பூர்நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும்,ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி, பண்ணாரி எம்.எல்.ஏ.முன்னாள் எம்பிகள் காளியப்பன்,சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுப்பது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தல் போன்ற பணி களில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஈடுபடுவது,' குறித்து ஆலோ சனை வழங்கப்பட்டது.

இதில் கட்சியின் அந்தியூர் நகர செயலாளர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம்,முன்னாள் கோபி யூனியன் சேர்மன் வக்கில் பி.யு.முத்துச்சாமி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வி.குருராஜ்,,ஜெயலலிதா பேரவை அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஒட்டல் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் கே.எஸ்.மோகன் குமார், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வினோத்குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் டி.கே.வி.எஸ்.ஈஸ்வரன், அந்தியூர் இளைஞர் அணி நகர செயலாளர் பார் மோகன், ஜெயல லிதா பேரவை நகர செயலாளர் டி.எஸ்.பால்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஹரிபாஸ்கர் (டி.என்.பாளையம்),நாராயணன், (அந்தியூர்) சீனிவாசன் (கோபி)துணைச்செயலாளர் எஸ்.ஜி.சண்முகானந்தம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வெற்றிவேல், முருக பிரகாஷ்,கூகலூர் பேரூராட்சி கழக செயலாளர் பூபதி,உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post