மனநலம் பாதிக்கப்பட்ட பின் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

 



ஈரோடு கணபதி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் சண்முகம் மனைவி சாந்தி (வயது 48) இவர் கடந்த இரண்டு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு இவர் வீட்டில் தனியாக இருந்தார் வீட்டின் முன்பு உள்ள குளியல் அறையில் கதவை உள்பக்கமாக தாள் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றி தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாந்தி தீப்பிடித்து எரிந்து போன நிலையில் இறந்து போய் உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் காவல் அதிகாரிகள் மன்சூர் அலி மற்றும் பரமசிவம் சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.

Previous Post Next Post