வங்கிக் கணக்கில் வெறும் ₹500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை! - அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்!


 வங்கிக் கணக்கில் வெறும் ₹500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை! - அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளுக்கு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் வலுக்கிறது!

காரணத்தையே குறிப்பிடாமல், ஜூலை 5ம் தேதி இருவரும் சென்னைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்னை சென்றுள்ளனர் அப்பாவி விவசாயிகள்.

பாஜக நிர்வாகி உதவியுடன் தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. வங்கியில் ₹500 மட்டுமே வைத்திருந்தவர்களிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி-யிடம் புகார்!

Previous Post Next Post