கோவை , வரதராஜபுரம், கே.ஜி.கார்டன் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில், ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரமாகிய இன்றைய தினம் குரு பூஜை மற்றும் நாகசாந்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது

கோவை , வரதராஜபுரம், NG ராமசாமி மேல்நிலைப்பள்ளி பின்புறம்,எல்.ராமசாமி நகர் ,கே.ஜி.கார்டன் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில்,  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரமாகிய இன்றைய தினம் குரு பூஜை,,மற்றும் நாகசாந்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது…
கோவை , வரதராஜபுரம் எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன்  பகுதியில் பக்தர்கள் அனைவராலும்  ஃபாரின் விநாயகர் என அழைக்கப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர்  கோவில் உள்ளது..கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து  கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளும் பிரார்த்தனைகளும் உடனுக்குடன் தீர்ந்து கோவையில் மிக சக்தி மிக்க கோவிலாக உள்ள இந்த கோவில் வளாகத்தில் அனைத்து ராசிகளுக்குமான செடிகள் கொண்ட ஆன்மீக தோட்டம் அமைந்துள்ளது..அதே போல  கோவில் வளாகத்தில்,, பாரின் விநாயகர்,ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் , ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணர்,ஸ்ரீ அகத்திய மகரிஷி , ஸ்ரீ கோமாதா மற்றும் ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ ஐஸ்வர்யேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவையின் சிறப்பு வாய்ந்த கோவிலாக இருந்து வருகின்றது . இந்நிலையில், ஸ்ரீ அகத்திய மகரிஷியின் பிறந்த தின நட்சத்திர விசேஷ தினமான    ஆயில்ய நட்சத்திரத்தில் அகத்தியருக்கு ஆயில்யம் மகா குரு பூஜை விழாவுடன்,நாக சாந்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது..
இதில் பால்,தயிர்,பழங்கள் உள்ளிட்ட 18 திருமஞ்சனங்கள் கொண்டு அகத்திய மகரிஷிக்கு  சிறப்பு அபிஷேகம்,மகா தீபாராதனை நடைபெற்றது..  இதில் நடைபெற்ற சிறப்பு வாத்திய இசை மூலம் பல்வேறு ராகங்களின் மூலம் ராக இசை ஆராதனை பாடல் களை பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ரசித்தனர்..   ..இந்த சிறப்பு பூஜையில்  குடும்ப சுபிட்சத்திற்காக பக்தர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட  பாக்கட் காலண்டர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.. இதில்  எல் ராமசாமி நகர் , கேஜி கார்டன் , சான்வி அபார்ட்மெண்ட் , சிவாநகர் வெங்கடேஸ்வரா அபார்ட்மெண்ட் , ஜோதி நகர் மற்றும் இந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மற்றும் வெளியூர் பக்தர்கள்  திரளாக கலந்து கொண்டனர்…இங்கு வழிபடும் பக்தர்களுக்கு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாகத்தோச நிவர்த்தி, குழந்தையின்மை பிரச்சனை தீருதல்,கல்வியில் ஆர்வமின்மை தீர்ந்து சிறப்பான கல்வி பெறுதல்,திருமணங்கள் விரைவில் கூடுதல், சகல திருஷ்டி, சகல தோஷங்கள் நிவர்த்தியாவதையும் கொடிய நோய்களும் குணமாவதையும் பக்தர்கள் அனுபவத்தில் உணரலாம்..
கோவையில் அமைந்துள்ள இந்த சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு அனை வரும் வந்து இறையருள் பெற கோவில் பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Previous Post Next Post