தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் அதிகப்படியான மழை நீர்.! - தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை.!


 தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் அதிகப்படியான மழை நீர்.! -  தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர்

முக்கிய எச்சரிக்கை.!


இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- 


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார்  10100 கன அடி நீர் இன்று (29.12.2023)  வந்து கொண்டிருப்பதாலும்   கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும்,  மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  எச்சரிக்கப்படுகிறார்கள். 


மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post