உங்களைத் தேடி, உங்கள் ஊரில் கோபி வட்டத்தில் நடைபெறுகிறது.

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.


இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 31.01.2024 அன்று காலை 9.00 மணி முதல் மறுநாள் (01.02.2024) காலை 9.00 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 31.01.2024 அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப தெரிவித்துள்ளார்

Previous Post Next Post