*கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில்கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது*


 கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது. மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K. A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. மகுடேஸ்வரன் அவர்கள் வெற்றி பெற்ற ராஜ் நவீன் பிரதர்ஸ் AMKC கோபி அவர்கள் அணிக்கு முத்தான முதல் பரிசு ரூ.10000 வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர் திருமதி. தெய்வானை மற்றும் கபடி வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post