தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை


 தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்து 94 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பெருமாள் கோவில் அறங்காலர்கள் குழு தலைவர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post