தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-


 தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!- 

பாஜகவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் சுமார்  100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நேற்று திமுகவில் இனைந்தனர் .!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் பானுப்பிரியா, விவசாய அணி மண்டலத் தலைவர் சரவணகுமார் தலைமையில் சுமார் 100 பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் INDIA கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயத்தில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து திமுகவில் இணைந்தனர். 


இது குறித்து அவர்கள் கூறுகையில்:- சமீப காலமாக கட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்காததால் அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாக தெரிவித்தனர். திமுகவில் இணைந்த இவர்கள் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுகவில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக வடக்கு மாவட்ட தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post Next Post