சேலம் மாவட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம்

 சேலம் மாவட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ஊட்டி சென்றுள்ளனர். திரும்பி வரும் போது கோபி சத்தி மெயின் ரோடு காசிபாளையம் அருகே ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் அவர்கள் வந்த பஸ்  மோதி 13 பேர் காயம் அடைந்தனர்.

கோபி உட்கோட்ட கடத்தூர் காவல்துறையினர் மற்றும் கவுந்தப்பாடி நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விபத்தில் காயமுற்ற மாணவர்கள் அரசு மருத்துவமனையில் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர். 

இந்த சம்பவம் அங்கிருந்த பொது மக்கள், நோயாளிகள் மனதை நெகிழச் செய்தது.

Previous Post Next Post