தி.மு.க.,வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 51-வது வார்டு செயலாளர் ஆதவன் முருகேஷ் தலைமையில் நேற்று இரவு தாராபுரம் ரோடு, புதூர்பிரிவு, பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அதில் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், கருவம்பாளையம் பகுதி கழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி, தலைமை கழக பேச்சாளர் போடி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாவட்ட, மாநகர, 51-வது வார்டு நிர்வாகிகள், கலந்து கொண்டனர்![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZt3btmvNKvwKuvHEP0OliKOxRRKSXAC26jShNk9ux8HbrIlTMhT90dWtlDURLeRRujeBmp4EnKsOdQgz1vZGuu0fQPFqrqJKBurQ-86pErr8ax2Gjl_UBL8AmU34SGiAmSS-lfwhfmle3/)