திண்டுக்கல்லில் விஷால் பேட்டி

 


திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தலைவர் நடிகர் நாசர் கூட்டாக செய்த இடம் பேசுகையில் தேர்தல் நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம்.கட்டிடப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு இந்த தேர்தலை சந்திக்கிறோம். கடந்த மூன்று வருடங்களாக சொன்னதைச் செய்துள்ளோம். சொன்னதைவிட செய்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த அணி ஏன் மறுபடியும் தேர்தலை சந்திக்கிறது என்றால் நாங்கள் சொன்னதை முழுமையாக செய்துள்ளோம்.ஒரு பணி மட்டும் தான் நிலுவையில் உள்ளது. இன்னும் ஐந்து மாதங்களில் சங்க கட்டிட பணிகளை முடித்து விடுவோம். தேர்தல் என்றாலே அரசியல் உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் உண்டு முப்பது வருடமாக ஒருவர் கையில் இருந்த சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு 3 வருடங்கள் ஆகிவிட்டது தேர்தல் முடிந்தவுடன் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது எங்களது கடமை என தெரிவித்தனர்


Previous Post Next Post