அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளில் ஐந்தாவது நீரேற்று நிலைய துவக்கப் பணிகள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் தில் அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளில் ஐந்தாவது நீரேற்று நிலைய துவக்கப் பணிகள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

 


 

நம்பியூர் அருகே உள்ள வர பாளையத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் ஐந்தாவது நீரேற்று நிலைய பணிகள் துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ராஜா சம்பத், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன், நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ,மாவட்ட எஸ்.பி சக்தி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார் அப்போது பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் என பலர் பல்வேறு தியாகங்களை செய்து இந்தத் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுமார் 1652 கோடி நிதி ஒதுக்கப்பட்டு  அத்திக்கடவு அவிநாசி நீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

ஐந்தாவது நீரேற்று நிலைய பணிகள்  வரப்பாளையத்தில் அமைந்துள்ளது. அதற்காக 8 பேர் நிலம் வழங்கியுள்ளனர் அவர்களுக்கு அரசின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டமானது மத்திய மாநில அரசுகள் 50 - 50 சதவீத அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது ஆனால் ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி முழு தொகையையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டு பணிகளை துவங்கியுள்ளது. ஒரு நீரேற்று நிலையத்திற்கு 250 எச் பி திறன் கொண்ட மின் மோட்டார் அமைக்க வேண்டும் மேலும் அப்பகுதியில் பாசனம் பெறும் விவசாய நிலத்திற்கு விவசாயிகள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் இவைகளை விவசாயிகளிடம் வசூல் செய்யாமல் அரசு சுமார் 60 கோடியில் சோலார் மின் திட்டத்தின் மூலம் நேற்று நிலையங்களுக்கு தேவையான மின் மோட்டார்களை அமைக்க உள்ளது.

 

இத்திட்டத்தின் மூலம் 971 சிறு குட்டைகள் 41 ஊராட்சி ஒன்றிய குளங்கள் 32 பொதுப்பணித்துறை குளங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.இதில் 24 ஆயிரத்து 478 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற உள்ளது. விவசாயிகள் இந்த தண்ணீரை சொட்டு நீர் பாசனம் ஆகும் தெளிப்பு நீர் பாசனம் ஆக சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இந்தத் திட்டமானது கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி வருகிறது காளிங்கராயன் அணை யின் கீழ் பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலமாக குளம் குட்டைகள் நிரப்பப்படும். பலர் சமூக வலைதளங்களில் இந்த திட்டம் செயல்பட போவதில்லை எனக் கூறி வருகின்றனர் அவை அனைத்தையும் முறியடித்து இத்திட்டத்தை அரசு சிறப்பாக செய்து காட்டும் எனவும் 

 

மேலும் அந்தியூர் தொகுதியில் ஆறு இடங்களில் 67 கோடி செலவில் புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. மேலும் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் ரூ 60 கோடியில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு மேல் பகுதியில் முக்காணி என்ற இடத்தில் கேரளாவிற்கு பிரிந்து செல்லும் தண்ணீரை குகை வழியாக பவானிசாகர் அணைக்கு கொண்டு வந்து ஆண்டு முழுவதும் அணை நிரப்பும்  திட்டம் செயல்படுத்தப்பட்ட உள்ளது. காய்ந்து வறண்டு கிடக்கும் இந்த பூமியை பொன் விளையும் பூமியாக இந்த அரசு மாற்றிக் காட்டும் எனவும் கூறினார். நிகழ்ச்சியில் அத்திக்கடவு அவிநாசி போராட்டக்குழுவினர் அதிமுக கட்சி நிர்வாகிகள் அரசு வழக்கறிஞர் கங்காதரன் , சேரன்சரவணன், ஈஸ்வரமூர்த்தி, சந்திரசேகர் ,ராமசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வி.சி. குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post