பழனி உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2.57கோடி

பழனி உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2.57கோடி

 


 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கை வரவு ரூ.2.57கோடியை தாண்டியது.

காா்த்திகை  மாதத்தை முன்னிட்டு ஐயப்ப மற்றும் முருக பக்தா்கள் வருகை காரணமாக இக் கோயில் உண்டியல்கள் 25 நாள்களில் நிரம்பின. இதையடுத்து புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூ.2 கோடியே 57லட்சத்து 41ஆயிரத்து 520 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 670கிராமும், வெள்ளி 12ஆயிரத்து 300 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 545-ம்,  கிடைத்தன. மேலும், பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் உள்ளிட்டவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா் உண்டியல் எண்ணும் பணியில் கல்லூரி மாணவியா், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இப் பணியை பழனிக் கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் விஜயன், மேலாளா் சேகா், ஆய்வாளா் உமா உள்ளிட்டோா் கண்காணித்தனா்.

 

 

Previous Post Next Post