கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் பொங்கல் திருவிழா!!

கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள மிகவும் சக்திவாய்ந்த பொட்டு சாமிக்கு பொங்கல் திருவிழா தை மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.



பொட்டு சாமிக்கு அன்று மதியம் ஒரு மணி அளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இக்கோயில் திருவிழா வருடம் ஒரு முறைமிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அது சமயம் ஊர் பொது மக்கள் அனைவரும் பொங்கல்  வைத்தும், மாவிளக்கு எடுத்தும்,  சாமி அருள் பெற்றுவருகின்றனர் என்று  கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Previous Post Next Post