மாவட்ட அளவிலான தொழில் திறன் போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்!!

மாவட்ட அளவிலான தொழில் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்,வழங்கினார்.
 



பாரத பிரதமரரின்   உத்தரவின்பேரில், மத்திய அரசின் மூலம் இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் நமது இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.  அதனடிப்படையில், கல்வி வளர்ச்சி, பொதுசுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன வசதி மேம்பாடு, தொழில்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட 5 காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி, மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திhp கௌசல் கேந்திரா  பிரதம மந்திhp கௌசல் விகாஸ் யோஜ்னா போன்ற திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு தொழில்திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலமாகவும் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.


 


குறிப்பாக, மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல், பிளம்பர், வெல்டர், சமையலர், ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற பல்வேறு தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் என 3 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2019-2020-ஆம் ஆண்டில் இதுவரை 3,467 இளைஞர்கள் பல்வேறு தொழில்திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.  இவ்வாறு பயிற்சி பெறும் இளைஞர்கள் தங்களது திறனை வெளிப்படுத்திட ஏதுவாக 23.01.2020 முதல் ஒரு வார காலத்திற்கு மாவட்ட அளவிலான தொழில்திறன் போட்டி நடத்தப்பட்டது.  இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.  மேலும், மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறும் நபர்கள் மாநில அளவில் நடத்தப்படவுள்ள திறன் போட்டியில் பங்கேற்க தகுதியுள்ளவர் ஆவார்கள்.    மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் இத்தகைய திட்டங்களை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பேசினார்.



தொடர்ந்து, கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், தொழில்திறன் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார். இவ்விழாவில், மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநர் எஸ்.ரவி பாஸ்கர், மாவட்டத் திறன் பயிற்சி உதவி இயக்குநர் எஸ்.ரமேஸ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.மதுக்குமார், கண்ணபிரான் மில்ஸ் பரமக்குடி நிலைய மேலாளக்குழு தலைவர் ஜி.குருநாதன், டாடா மோட்டார்ஸ் இராமநாதபுரம் நிலைய வேளாண்குழுத் தலைவர்ஜெ.இராஜகணேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post