1000 பேருக்கு முகக்கவசம், கையுறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் முகக்கவசம், சோப்பு, கிருமிநாசினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் முகக்கவசம், கைகழுவுவதற்கான சோப்பு, கிருமிநாசினி மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு வழங்கிய அவர், மக்கள் சமுக இடைவெளி கடைபிடிப்பதாகவும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பால் துணைத் தலைவர் பாரி பி.பாபு, ஆரணி நகராட்சி ஆணையர் அசோக்குமார், பொறியாளர் கணேசன், ஆரணி டிஎஸ்பி செந்தில், நகர காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post