கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தட்டு, கடலைப்போர் எரிந்து நாசம்: ரூ5000 நிதியுதவி வழங்கிய ஊராட்சி தலைவர் மகுடேஸ்வரன்

கோபிச்செட்டிபாளையம்,  கெட்டிச்செவியூர் ஊராட்சி ஆவலாம்பாளையம் கிராமம் அம்மாசை மூப்பனூரில் வசித்து வரும் வையா மூப்பன் மகன் சக்திவேல்   என்பவருக்கு சொந்தமான கடலைப்போர் மற்றும் தட்டுப் போரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.



இதனை தீயணைப்பு துறையின் அலுவலர் பொன்னுச்சாமி தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.


இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் மற்றும் கால்நடை பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து நிவாரண நிதியாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  அவர்களின் ஆணைக்கிணங்க வையா மூப்பன் மகன் சக்திவேலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் .கே.எம். மகுடேஸ்வரன் நிதியாக  ரூ.5000 வழங்கினார். 



  அருகில் கிராம நிர்வாக அலுவலர்கள்.நவாப்ஜான் .ரேவதி, ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி, வார்டு உறுப்பினர் ராமசாமி மற்றும் முன்னாள் துணை தலைவர் கருப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


Previous Post Next Post