தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1683 ஆனது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1629 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று 54 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1683 ஆக உள்ளது. 


அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் 400 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 


கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் புதிதாக தருமபுரி மாவட்டம் இணைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.


மாவட்ட வாரியாக இன்று  கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:


திண்டுக்கல்-3, செங்கல்பட்டு-1, மதுரை-2, நாமக்கல்-4, ராம்நாடு-1, சேலம்-5, தென்காசி-1, தஞ்சை-1, திருநெல்வேலி-1, திருப்பத்தூர்-1, திருப்பூர்-1, திருவண்ணாமலை-1, வேலூர்-1, விழுப்புரம்-3


தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752 ஆனது


 


Previous Post Next Post