கொடுமுடி ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் காவலர்களுக்கு மூன்று வேளை உணவு 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கொடுமுடி தாலுக்காவில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இந்த நிலையில்  கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் கொடுமுடி ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தினமும் மூன்று வேளை உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கொடுமுடி ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர்கள் பெ.கு.பொன்னுச்சாமி, பெ.தி.கோபாலகிருஷ்ணன் மு.சுப்பிரமணி கதிர்வேல், செ. கோபி, ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் க.விஜயகுமார் அவர்கள் மேற்பார்வையில்  உணவு வழங்கும் நிகழ்வு  நடைபெறுகிறது.

 

 

Previous Post Next Post