80 வீடுகளுக்கு மின்சாதனப் பொருட்கள்: கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ வழங்கினார்

திருப்பூர் வடக்கு தொகுதியில் கடந்த வாரம் உயர்மின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவச டியூப் லைட், பேன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.



திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் திருவள்ளுவர் நகரில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவில் உயர் மி்னழுத்தம் காரணமாக 80 வீடுகளில் மின் விளக்குகள், பேன், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. அந்த பகுதி பொதுமக்கள் 80 பேரின் வீடுகளுக்கு இலவசமாக டியூப் லைட், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது. இதை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் வழங்கினார். பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமனியம், செந்தில் மற்றும் மின்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றன


Previous Post Next Post