பழனியில் ஆதரவற்ற முதியோர்வர்கள், பேருந்து கிடைக்காமல் தங்கிருப்பவர்களுக்கு இலவச உணவு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் 144தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பழனி பேருந்துநிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்வர்கள்.பேருந்து கிடைக்காமல் தங்கிருப்பவர்களுக்கு  பழனி அதிமுக நகரச்செயலாளர் முருகானந்தம்  பழனி நகராட்சியில் கட்டணம் செலுத்தி அம்மா உணவகத்தில்  நேற்றுகாலை 350 நபர்களுக்கு இட்லி வடை சாம்பார்.இரண்டு வகை சட்னியுடன் ஆதரவற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. மதியம் 400 பேர்களுக்கு பழனி அதிமுகவின் நகரச்செயலாளர் முருகானந்தம் தலைமையில்  நகராட்சி கமிஷனர் லட்சுமணன், டிஎஸ்பி.விவேகானந்தன், ஆய்வாளர் செந்தில்குமார், லயன் சுப்புராஜ் ஆகியோர்கள் ஆதரவற்றோர்களுக்கு முட்டை, லெமன்சாதம், தயிர்சாதம். தக்காளிசாதம்  உள்ளிட்ட வெரைட்டி ரைஸ்களை வழங்கினார்கள். அனைவரும் சமூக இடைவெளிவிட்டு காத்திருந்து சாப்பிட்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின்  அவைத்தலைவர் இரா.பகவதி நகர துனைசெயலாளர் முருகன் இனைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் அகிலாண்டம் சரவணன், தாசில்தார் ஒய்வு தண்டபாணி, லோகநாதன், செல்வக்குமார், ஹலோ டெய்லர் நடராஜன், அய்யாவு, கோபி, உத்திரம்பிள்ளை, சேகர், சக்திவேல், வரமணி, கிருஷ்ணகுமார், ஆகியோர்கலந்து கொண்டு உணவு வழங்கினர்.


Previous Post Next Post