சிறுவலூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை: வனிதா வேலுசாமி தலைமையில் தீவிரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆலோசனைப்படி,   கோபி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சிறுவலூர் முதல் நிலை  ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பி.வனிதா வேலுசாமி தலைமையில்  பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரம் வழங்கியும்,  நவீன இயந்திரம் மூலம் கிருமி  நாசினி தெளித்தும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.


அருகில் ஊராட்சி மன்ற செயலர் சதீஸ்குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.மேலும் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம்,  சானிடைசர் மற்றும் உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது


Previous Post Next Post