திருப்பூர் ஜே.சி.ஐ சார்பில் கிருமிநாசினி பாதை: நித்தியானந்தன் துவக்கி வைத்தார்

திருப்பூரில் ஜே.சி.ஐ., சார்பில் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.



திருப்பூரில் அரசு நிர்வாகமும், தன்னார்வ அமைப்பினரும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக நாட்டிலேயே முதல் முறையாக திருப்பூரில் தான் கிருமி நாசினி பாதை  அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் மீண்டும் பெரியார் காலனி யில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் புதிதாக கிருமிநாசினி பாதை ஜே.சி.ஐ.அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்கள், ரோட்டில் செல்பவர்கள் பயனடையும் வண்ணம் ஜே.சி.ஐ. அமைப்பினர் அமைத்துள்ளனர். இந்த கிருமிநாசினி பாதையை ஜே.சி.ஐ., திருப்பூர் மாவட்ட தலைவர் நித்தியானந்தன் துவக்கிவைத்தார். இந்த கிருமிநாசினி பாதையில் அவிநாசி ரோட்டில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் உள்ளே சென்று வரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


Previous Post Next Post